தனிமை
உலகெல்லாம் உனக்குத் தேவை,
உலகுக்கோ நீ தேவையில்லை
தாமரையிலைத் தண்ணீருக்குத்
தாக சாந்தி நித்தம்
எதற்கு?
பூவுக்கு வாசம் சொந்தமோ?
பூக்காத மலரை உலகம்
நாடுமோ?
வந்து போகின்ற உறவுகள்
வாசத்தில்
வாழ்ந்து விட்டால் வழக்கெதற்கு ?
தாயாகச் சுமந்து தவித்தாலும்
தொப்புள்கொடி தனியாகவேண்டும் !
தென்றலாக வாழ்க்கை இருந்தாலும்
தனிமையாகத் தானே செல்லவேண்டும்?
தனிமையென்றும் வாட்டமில்லை,
தனிமையென்றும் வீழ்ச்சியில்லை !
தன்னையறிந்த மாந்தருக்குத்
தாகம் என்றும் இருப்பதில்லை
!
No comments:
Post a Comment