மார்கழி மணாளன்
திருக்காப்பு
வாழிய வாழிய வலக்கை சக்கரம்
வாழிய வாழிய மலர்க்கை சங்கம்
வாழிய வாழிய துளசி மோகனன்
வாழிய வாழிய மார்கழி மணாளன் !
வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்
கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்
விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்
வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !
திருவருள் பொங்கிடும் திருவடி சரணம்
பொன்னிரு பாதம் இன்னுயிர் காக்கும்
கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்
கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !
பூவிரித் தாமரை பொற்பதச் செல்வி
பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !
போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்
போதாதவர்க்குப் பொன்னும் தருவாள் !
அரங்கனின் அயர்வினை நீக்கிடும் காலை
ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !
மார்கழிக் காலையில் மாதவன் போற்றி
மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !
No comments:
Post a Comment