இலையுதிர் காலம்
(published today in
Vallamai.com
நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை ...
பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை
வந்தது நின்றது வளர்ந்தது வீழ்ந்தது
விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது !
(published today in
நேற்றைய சொந்தங்கள் நிலையாய் இல்லை ...
பற்றிய பந்தங்கள் நினைவில் முல்லை
வந்தது நின்றது வளர்ந்தது வீழ்ந்தது
விந்தை வாழ்வெனும் மாயை கலைந்தது !
பூப்பும் மூப்பும் புலனுள் அடக்கம்
பூவா நினைவுகள் மண்ணில் கிடக்கும்
புரிந்த உயிர்கள் புதிதாய் பிறக்கும்
புரியா நெஞ்சங்கள் பொழுதும் துடிக்கும் !
மதியிட்ட கணக்கை விதியொன்று வென்றது
விழிகண்ட பார்வை வழியின்றி முடிந்தது
அறிவென நினைத்தது அமைதியில் மறைந்தது
விதியிட்ட பாதையோ வாழ்வெனும் கவிதை ?
வண்ணங்கள் விலகிட வெளிச்சமே உண்மை
எண்ணங்கள் மறைந்தால் எல்லாம் நன்மை
சின்னங்கள் உள்ளே சிறைப்பட்ட வாழ்க்கை
பின்னங்கள் இல்லை பேரருள் கருணை !
பூவா நினைவுகள் மண்ணில் கிடக்கும்
புரிந்த உயிர்கள் புதிதாய் பிறக்கும்
புரியா நெஞ்சங்கள் பொழுதும் துடிக்கும் !
மதியிட்ட கணக்கை விதியொன்று வென்றது
விழிகண்ட பார்வை வழியின்றி முடிந்தது
அறிவென நினைத்தது அமைதியில் மறைந்தது
விதியிட்ட பாதையோ வாழ்வெனும் கவிதை ?
வண்ணங்கள் விலகிட வெளிச்சமே உண்மை
எண்ணங்கள் மறைந்தால் எல்லாம் நன்மை
சின்னங்கள் உள்ளே சிறைப்பட்ட வாழ்க்கை
பின்னங்கள் இல்லை பேரருள் கருணை !
No comments:
Post a Comment